கொரோனா : சிகிச்சை பலனின்றி திருவொற்றியூரை சேர்ந்த 68 வயது மூதாட்டி உயிரிழப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருவொற்றியூரை சேர்ந்த 68 வயது மூதாட்டி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2020-05-21 08:19 GMT
கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருவொற்றியூரை சேர்ந்த 68 வயது மூதாட்டி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் சிறுநீரக பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல் புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த 60 வயது ஆண் ஒருவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நேற்றிரவு உயிரிழந்தார். 
Tags:    

மேலும் செய்திகள்