மன்னார் வளைகுடா பகுதியில் தீவிர கண்காணிப்பு

மன்னார் வளைகுடா தீவுகளை மையமாக வைத்து கடத்தல் தொழில் நடைபெறுவதால் கடற்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.

Update: 2020-05-20 08:58 GMT
மன்னார் வளைகுடா தீவுகளை மையமாக வைத்து கடத்தல் தொழில் நடைபெறுவதால், கடற்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து,போதைப் பொருள்கள்,கடல்அட்டை,கடல் குதிரை போன்றவை இலங்கைக்கு கடத்திச்  செல்வதும், அங்கிருந்து தங்கம் கடத்தி வரும் சம்பவங்களும் அதிகரித்து வருவதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். ஊரடங்கு காலத்தில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்தி 
உள்ளதாகவும் தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்