மது கிடைக்காததால் தூக்க மாத்திரை - மனோரமாவின் மகன் மருத்துவமனையில் அனுமதி

மது கிடைக்காததால் நடிகை மனோரமாவின் மகன் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2020-04-08 09:00 GMT
மது கிடைக்காததால் நடிகை மனோரமாவின் மகன் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மறைந்த நடிகை மனோரமாவின் மகன் 64 வயதாக பூபதி திருமணமான இவருக்கு 1 மகன்  மற்றும் 2 மகள்கள் உள்ளனர். தியாகராயநகரில் வசிக்கும் இவருக்கு தீவிர மதுப்பழக்கம் இருந்தது. ஊரடங்கால் மது கிடைக்காமல் அவதியடைந்த இவர், கடந்த 6ம் தேதி அதிக அளவில் தூக்க மாத்திரைகளை எடுத்துள்ளார். இதனால் வலிப்பு ஏற்படவே உறவினர்கள் அவரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்