தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 15ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-03-24 10:42 GMT
வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்கா சென்று சென்னை திரும்பிய போரூரை சேர்ந்த 74 வயது முதியவரும் , புரசைவாக்கத்தை சேர்ந்த 52 வயது பெண் ஒருவரும் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஸ்விட்சர்லாந்து சென்று சென்னை திரும்பிய கீழ்கட்டளையை சேர்நத 25 வயது பெண் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவலை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்