ஆடம்பர மாளிகையில் இயங்கி வந்த போலி மதுபான ஆலை - ரூ.10 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த தென்றல் நகரை சேர்ந்த வீராசாமி என்பவரின் சொகுசு மாளிகையில் போலி மதுபான ஆலை இயங்குவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

Update: 2020-03-23 03:33 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த தென்றல் நகரை சேர்ந்த வீராசாமி என்பவரின் சொகுசு மாளிகையில் போலி மதுபான ஆலை இயங்குவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.  இதனையடுத்து வீராசாமி தங்கி இருந்த மூன்று மாடி வீட்டை சோதனையிட்ட போலீசார் அதில் இருந்து  10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 லிட்டர் போலி மதுபாட்டில்களை கைப்பற்றினர். வீட்டில் இயங்கி வந்த ஆலையில் 750 எம்எல் மற்றும் 180 எம்எல் போலி மது பாட்டில்களை தயாரித்து அதனை வேலூர் மற்றும அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வீராசாமி விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்