சென்னை விமான நிலையம் இன்றிரவு முதல் மூடப்படுகிறது

கொரானா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 117 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

Update: 2020-03-21 18:20 GMT
கொரானா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இன்று  ஒரே நாளில் 117 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இன்று நள்ளிரவு முதல் ஒரு வாரத்திற்கு பன்னாட்டு முனையம் மூடப்படுவதாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கான விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்படுகிறது. இதனால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையமே வெறிச்சோடி காணப்படுகிறது.இன்று நள்ளிரவு முதல் 7 நாட்களுக்கு எந்தவிதமான விமான போக்குவரத்தும்  இருக்காது என்றும் ,   விமான நிலையத்தில் தீவிர துப்புரவு பணிகள் நடைபெறும் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்