"ஏப்ரல் 21 வரை போராட்டங்களுக்கு அனுமதி அளிக்க கூடாது" - தமிழக அரசு, காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வரும் ஏப்ரல் 21-ம் தேதி வரை போராட்டங்கள், பேரணிக்கு அனுமதி அளிக்க கூடாது என்று தமிழக அரசு, காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வரும் ஏப்ரல் 21-ம் தேதி வரை போராட்டங்கள், பேரணிக்கு அனுமதி அளிக்க கூடாது என்று தமிழக அரசு, காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், ஆதரித்தும் நடைபெறும் போராட்டங்களை தடுக்க கோரி, உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது போராட்டத்தின் தற்போதைய நிலை என்ன அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொது இடங்களில் ஆர்ப்பாட்டம், போராட்டம் உள்ளிட்டவைகளுக்கு அளிக்க கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.