கொரோனா - தீவிர கண்காணிப்பில் 12 பேர்

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞருக்கு சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் அவருடன் பழகிய 12 பேரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Update: 2020-03-19 07:36 GMT
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞருக்கு சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் அவருடன் பழகிய 12 பேரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அரும்பாக்கம் பகுதியில் சலூன் கடை ஒன்றில் வேலைபார்த்து வந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒருவர், சென்னையில் இருந்து டெல்லி சென்று விட்டு மீண்டும் ரயிலில் சென்னைக்கு திரும்பி உள்ளார். உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், கடந்த 17ஆம்தேதி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருடன் அறையில் தங்கியிருந்த 8 பேர் மற்றும், வீட்டின் கீழ் தளத்தில் குடியிருக்கும் 4 பேர் என 12 பேரையும் சுகாதார அதிகாரிகள், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்று கண்காணித்து வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்