மலேசியாவுக்கான விமான சேவை ரத்து எதிரொலி : ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கி தவிப்பு

மலேசியாவிற்கான விமான சேவை ரத்து செய்யப்பட்டதால், அந்நாட்டு சுற்றுலா பயணிகள், சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

Update: 2020-03-18 18:11 GMT
கொரோனா அச்சம் காரணமாக, மலேசியா உள்ளிட்ட 3 நாடுகளுக்கான விமான சேவையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதனால், இந்தியாவுக்கு  சுற்றுலா வந்துள்ள  ஆயிரக்கணக்கான மலேசிய பயணிகள், சொந்த நாடு திரும்ப முடியாமல் சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் முடங்கியுள்ளனர்.   

குறுகிய கால பயணமாக வந்ததால் தங்களிடம் போதிய பணம் இல்லாத நிலையில், கொரோனா அச்சத்தால், தங்கும் விடுதிகளிலும் புறக்கணிப்படுவதால், கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே, இந்திய நகரங்களில் சிக்கி தவிக்கும் தாங்கள் நாடு திரும்புவதற்கு மலேசிய தூதரகமும், இந்திய அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்