ராட்வீலரால் அதிர்ந்த சென்னை... ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த குழந்தை - தடுக்காமல் கைகட்டி வேடிக்கை பார்த்த ஓனர்

Update: 2024-05-06 11:01 GMT

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி பூங்காவில், 5 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்த போது இந்த கோர சம்பவம் அரங்கேறியிருக்கிறது. பூங்கா காவலாளியான ரகு, தன் மனைவி சோனியா மற்றும் 5 வயது மகளான சுதக் ஷாவுடன் பூங்காவுக்குள்ளே ஒரு அறையில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று தாயும், மகளும் தனியாக இருந்த நிலையில், பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி சுதக் ஷாவை, 2 ராட்வீலர் நாய்கள் கடித்து குதறியிருக்கின்றன. இரண்டுமே வளர்ப்பு நாய்கள் என்பதும், இவைகள் இந்தியாவில் வளர்க்க தடை செய்யப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது. நாய்களை அதன் உரிமையாளரான புகழேந்தி என்பவர், எந்த ஒரு கட்டுபாடும் இல்லாமல் பூங்காவிற்குள் அழைத்து வந்து திரிய விட்ட நிலையில், இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. சம்பவமறிந்து வந்த சிறுமியின் தந்தை ரகு, குழந்தையின் நிலை கண்டு பரிதவித்த நிலையில், குழந்தை சிதைந்து போய், கழிவறை கூட போகமுடியாமல் அவதிப்பட்டு வருவதாக கூறியது மனதை ரணமாக்கியது.

Tags:    

மேலும் செய்திகள்