லாரி - கார் நேருக்கு நேர் மோதி விபத்து : சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டம் வேப்பநத்தம் அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

Update: 2020-03-14 04:17 GMT
நாமக்கல் மாவட்டம் வேப்பநத்தம் அருகே லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இடிபாடுகளில் சிக்கிய உடல்களை மீட்டனர். உயிரிழந்தவர்களில் 4 பேர் பீகார் மாநிலத்தை சேர்ந்த கட்டட தொழிலாளர்கள் எனவும், இரண்டு பேர் நாமக்கல்லை சேர்ந்த கட்டட தொழிலாளர்கள் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்