"மக்கள் தொகை பதிவேடு, எந்த ஆவணங்களும் சேகரிக்கப்படாது" - மக்களவையில் மத்திய அமைச்சர் நித்தியானந்த ராய் எழுத்துப்பூர்வ பதில்

NPR எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்படும் போது எந்த விதமான ஆவணங்களும் சேகரிக்க படமாட்டாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2020-03-03 12:03 GMT
மக்களவை உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அந்த பதிலில், தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பாக கவலை கொண்டுள்ள மாநில அரசுகளுடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது. 
ஒவ்வொரு தனிநபர் மற்றும் குடும்பத்தினரின் இருப்பிடம் மற்றும் இதர விபரங்கள் தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கு எடுக்கும் போது சேகரிக்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்