அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் கருவி : பொது சுகாதாரத்துறை இயக்குனர் பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டயாலிசிஸ் கருவிகளை வைக்கவும், போதுமான அளவு டயாலிசிஸ் தொழில்நுட்பனர் பணியிடத்தை ஏற்படுத்தவும் உத்தரவிட கோரி, புஷ்பவனம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

Update: 2020-02-13 14:06 GMT
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டயாலிசிஸ் கருவிகளை வைக்கவும், போதுமான அளவு டயாலிசிஸ் தொழில்நுட்பனர் பணியிடத்தை ஏற்படுத்தவும் உத்தரவிட கோரி, புஷ்பவனம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு, இதுகுறித்து, தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்