ஊராட்சி மன்ற தலைவர் மீது இளம்பெண் புகார் - வாக்களிக்கவில்லை என மிரட்டல் விடுப்பதாக குற்றச்சாட்டு
கடலூர் அருகே டி.மணலூர் ஊராட்சி மன்ற தலைவர் கொலை மிரட்டல் விடுப்பதாக இளம்பெண் மாவட்ட எஸ்பியிடம் புகார் மனு அளித்துள்ளர்.
கடலூர் அருகே, டி.மணலூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினர், கொலை மிரட்டல் விடுப்பதாக வேல்விழி என்ற இளம்பெண் மாவட்ட எஸ்பியிடம் புகார் மனு அளித்துள்ளர். தனக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என கூறி, ஊராட்சி மன்ற தலைவர் மிரட்டியதாக அவர் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.