"தஞ்​சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும்" - துரைமுருகன்

தஞ்சை பெரிய கோவிலில் தமிழிலேயே குடமுழுக்கு நடத்த வேண்டும் என தி.மு.க பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-01-27 13:35 GMT
தஞ்சை பெரிய கோவிலில் தமிழிலேயே குடமுழுக்கு நடத்த வேண்டும் என தி.மு.க பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் எம்.பி அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும், ஏற்கனவே கல்வியை எடுத்துக்கொண்ட மத்திய அரசு தற்போது, சுகாதாரத்தில் கை வைத்துள்ளதாக தெரிவித்த அவர், இதே போக்கு நீடித்தால், மாநில அரசுகள் பஞ்சாயத்து போர்டுகளை விட மோசமடையும் என்று கூறினார். மேலும், ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தால் பிடி சோற்றுக்கும் பஞ்சம் ஏற்படும் என அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்