அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ராமேஸ்வரத்தில் பூஜை - பூஜை செய்த மணலை மிதிவண்டியில் எடுத்துக்கொண்டு பயணம்
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் இந்து முன்னணியின் சார்பில் பூஜை செய்யப்பட்டது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் இந்து முன்னணியின் சார்பில் பூஜை செய்யப்பட்டது. கடல் மணலில் சிவலிங்கம் அமைத்து பூஜை செய்யப்பட்ட மணலை எடுத்துக்கொண்டு அயோத்தி வரை அவர்கள் மிதிவண்டி பயணத்தை தொடங்கியுள்ளனர். நாளொன்றுக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும், ஓசூர், பெங்களூர், ஹைதராபாத் வழியாக, எழுபதாவது நாளில், அயோத்தியை அடைய உள்ளதாக, அவர்கள் தெரிவித்தனர்.