பொங்கல் பரிசு - அதிமுக, திமுகவினர் மோதல்
சேலம் மாவட்டம் ஆத்தூரில் பொங்கல் பரிசு பெறுவதில் அதிமுக, திமுகவினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் பொங்கல் பரிசு பெறுவதில் அதிமுக, திமுகவினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் காயமடைந்த அதிமுக உறுப்பினர்கள் புருஷோத்தமன், ராணி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் திமுக முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஸ்டாலின் என்பவரை போலீசார் கைது செய்ததோடு, மற்றொருவரை தேடி வருகின்றனர்.