கோவையில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக கோலங்கள்

கோவையில் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பொதுமக்கள் சிலர் தங்களது வீட்டின் முன்பு கோலங்கள் இட்டனர்.

Update: 2019-12-31 02:39 GMT
கோவையில் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பொதுமக்கள் சிலர் தங்களது வீட்டின் முன்பு கோலங்கள் இட்டனர். கோவையில் குனியமுத்தூர், சுந்திராபுரம், மாச்சம்பாளையம், பகுதிகளில் பொதுமக்கள் தங்களின் வீட்டின்முன் கோலங்கள் இட்டு அதன் அருகில் குடியுரிமை சட்டத்திற்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்க்கும் ஆதரவாக வாசகங்கள் இட்டு வருகிறார்கள். இந்த சட்டத்தால் இந்திய குடிமக்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்பதால் இந்த சட்டத்தை ஆதரிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். ஒரு பக்கம் இந்த சட்டத்தை எதிர்த்து கோலமிட்டு வரும் நிலையில், தற்போது ஆதரவாகவும் கோலங்கள் இடும் சம்பவம் அரங்கேறியுள்ளது. 


Tags:    

மேலும் செய்திகள்