காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாள் விழா - கே.எஸ்.அழகிரி மலர் தூவி மரியாதை
இந்தியாவின் ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் திருத்த சட்டத்தை ஏற்க முடியாது என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் திருத்த சட்டத்தை ஏற்க முடியாது என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் 135 ஆவது ஆண்டு நிறுவன நாள் விழாவையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் தலைவர்களின் புகைப்படத்திற்கு,கே.எஸ்.அழகிரி மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன் பின் பேசிய அழகிரி ஆர்எஸ்எஸ், பாஜகவின் கொள்கைகளை மக்களுக்கு தோலுரித்து காட்டுவோம் என கூறினார்.