காரைக்குடியில் தொடர்மழை : "மரபெஞ்ச்" மூலம் பாலம் அமைத்த பள்ளி நிர்வாகம்
காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. தாலுகா அலுவலகம் அருகே உள்ள அரசு உயர் நிலை நகராட்சி பள்ளியை சுற்றி மழைநீர் தேங்கிநிற்பதால் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். பள்ளி நிர்வாகம் மர பெஞ்ச்களை தண்ணீரின் மேல் போட்டுள்ளதால் அதனை மாணவர்கள் பாலம் போல் பயன்படுத்தி வருகின்றனர்.