பணி நிரந்தரம் வேண்டி ஒப்பந்த பணியாளர்கள் தொடர்ந்த வழக்கு
ஒப்பந்த பணியாளர்களுக்கு பின்வாசல் வழியாக பணி நிரந்தரம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியம், மற்றும் குடிநீர் திட்டங்களில் நியமிக்கப்பட்டிருந்த ஒப்பந்த பணியாளர்கள், பணிநிரந்தரம் வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்கள் பணிநிரந்தரம் கோர முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்ததோடு, இவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கி, பின்வாசல் நியமனங்கள் மேற்கொள்வது, தகுதியான விண்ணப்பதாரர்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயல் என தெரிவித்துள்ளார்.