"தமிழகத்தில் மூன்றாம் நிலை நகராட்சிகள் இல்லை"

தமிழகத்தில் மூன்றாம் நிலை நகராட்சிகள் இல்லை என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

Update: 2019-11-29 07:33 GMT
தமிழகத்தில் மூன்றாம் நிலை நகராட்சிகள் இல்லை என  அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அவசரம் சட்டம் பிறப்பித்த அரசு, ஏற்கனவே தமிழகத்தில் 3ஆம் நிலை நகராட்சிகள் 49 இருந்ததாகவும், அவற்றில் சென்னை, திருப்பூர், கோவை, ஈரோடு, வேலூர் மாவட்டங்கள் விரிவாக்கத்தின் போது, மாற்றம் செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மீதமிருந்த 36 நகராட்சிகளும் தரம் உயர்த்தப்பட்டதால், தமிழகத்தில் 3ஆம் நிலை நகராட்சி இல்லை என அவசர சட்டம் பிறப்பித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இனி, 3 ஆம் நிலையில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் என அழைக்கப்பட உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்