"ரயில்வே துறையை அம்பானி, அதானிக்கு கொடுக்க வாய்ப்பு" - காங்கிரஸ் எம்பி மாணிக் தாகூர் குற்றச்சாட்டு

ரயில்வே துறையை, அம்பானி மற்றும் அதானிக்கு கொடுக்க, பிரதமர் மோடி தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளதாக விருதுநகர் எம்.பி. மாணிக் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2019-10-10 22:58 GMT
ரயில்வே துறையை, அம்பானி மற்றும் அதானிக்கு கொடுக்க, பிரதமர் மோடி தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளதாக விருதுநகர் எம்.பி. மாணிக் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார். திருப்பரங்குன்றத்தில் ரயில் நிலையம் அமைக்கும் பணியை பார்வையிட்ட அவர், செய்தியாளர்களிடம் பேசும்போது இவ்வாறு கூறினார். தனியார் துறைகளை ஊக்குவித்த முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு, பொதுத்துறைக்கு பாதகமாக செயல்படவில்லை என்றும் ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பொதுத் துறைக்கு பாதகமாக செயல்படுவதாகவும் மாணிக் தாகூர் குற்றம் சாட்டினார். 

Tags:    

மேலும் செய்திகள்