சுபஸ்ரீ உயிரிழப்பு : ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு

சென்னை பள்ளிக்கரணையில் சாலையில் வைக்கப்பட்ட பேனர் விழுந்த விபத்தில், சுபஸ்ரீ என்பவர் உயிரிழந்தார்.

Update: 2019-10-09 22:22 GMT
சென்னை பள்ளிக்கரணையில் சாலையில் வைக்கப்பட்ட பேனர் விழுந்த விபத்தில், சுபஸ்ரீ என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல்துறை, பேனர் வைத்த ஜெயராமன் என்பவரை 12 நாட்கள் கழித்து கைது செய்தது. இந்த நிலையில்,  மகளின் உயிரிழப்புக்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க அரசுக்கு உத்தரவிட கோரி, சுபஸ்ரீயின் தந்தை ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், சட்டவிரோதமாக பேனர் வைப்பதை  தடுக்க நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தான், தனது மகள் இறந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது மகளின்  மரணம் தொடர்பாக சிறப்பு புலானாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும், சட்டவிரோதமாக பேனர் வைப்பதை தடுக்க சிறப்பு சட்டம் கொண்டு வர  தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்