பிரதமர் மோடி- ஜி ஜின்பிங்கை வரவேற்று பள்ளி மாணவர்கள் பேரணி

பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரை வரவேற்கும் வகையில் நடைபெற்ற தேச ஒற்றுமை பேரணியை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

Update: 2019-10-09 11:59 GMT
பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரை வரவேற்கும் வகையில் நடைபெற்ற தேச ஒற்றுமை பேரணியை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்த பேரணியில் பள்ளி மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.  பேரூராட்சி அலுவலகம் அருகில் இருந்து தொடங்கிய  பேரணி, அர்ச்சுணன் தபசு சாலை, கிழக்கு ராஜ வீதி உள்ளிட்ட முக்கிய தெருக்கள் வழியாக சென்றது. பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள், மோடி மற்றும் ஜின்பிங் படம் தாங்கிய பதாகைகளையும், இரு நாட்டு கொடிகளையும் கையில் ஏந்திச் சென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்