ஆண்டுக்கு ஒரு முறை தோன்றும் அபூர்வ சூரிய ஒளி - காந்தி மண்டபத்தில் அஞ்சலி செலுத்திய சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் ஆண்டுக்கு ஒரு முறை தோன்றும் அபூர்வ ஒளியை கண்டு களித்த ஏராளமான சுற்றுலா பயணிகள், காந்தியடிகளுக்கு தங்கள் அஞ்சலியை செலுத்தினர்.

Update: 2019-10-02 12:45 GMT
கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் ஆண்டுக்கு ஒரு முறை தோன்றும் அபூர்வ ஒளியை கண்டு களித்த ஏராளமான சுற்றுலா பயணிகள், காந்தியடிகளுக்கு தங்கள் அஞ்சலியை செலுத்தினர். அஸ்தி கட்டத்தில் நண்பகல் 12 மணிக்கு சூரிய ஒளி காட்சி தந்தது. காந்தியடிகளின் 150 வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள்  பலர் கலந்து கொண்டனர். 


Tags:    

மேலும் செய்திகள்