"பணம் வாங்காமல் மரம் நடுங்கள்" - ஜகி வாசுதேவ்க்கு அன்புமணி கோரிக்கை

காவிரி படுகையில், மரம் நட பிறரிடம் பணம் வசூலிக்கக் கூடாது என ஈஷா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ்க்கு பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2019-09-26 10:32 GMT
காவிரி படுகையில், மரம் நட பிறரிடம் பணம் வசூலிக்கக் கூடாது என ஈஷா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ்க்கு பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் பேசிய அவர், புவி வெப்ப மயமாதலால் ஏற்படும் தட்பவெட்ப சூழ்நிலைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். சுற்றுச்சூழலை பாதுகாக்க, தமிழக அரசு அதிக அளவில் மின் பேருந்துகளை இயக்க முன்வர வேண்டும் எனவும் அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்