சாக்கு வேடம் அணிந்து நடனம் - வினோத நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள செங்கப்படை கிராமத்தில், பக்தர்கள் சாக்கு வேடம் அணிந்து நூதன முறையில் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள செங்கப்படை கிராமத்தில், பக்தர்கள் சாக்கு வேடம் அணிந்து நூதன முறையில் நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த ஊரின் காவல் தெய்வமான அழகு வள்ளியம்மன் கோயில் புரட்டாசி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி, பேண்ட் மற்றும் சட்டை போல் சாக்குகளை தைத்துக்கொண்டு பக்தர்கள் மேளதாளங்களுடன் கிராமத்தை சுற்றி வந்தனர்.