கத்தி உள்ளே இருப்பது தெரியாமல் தையல் - கடலூர் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி

கடலூர் அரசு மருத்துவமனையில் கத்தி குத்துடன் வந்தவருக்கு கத்தி உள்ளே இருப்பது தெரியாமல் மருத்துவர்கள் தையல் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-09-18 12:21 GMT
கடலூர் மாவட்டம், மேல்பட்டாம்பாக்கத்தை சேர்ந்த பாரதிக்கும்,  பக்கத்து வீட்டுக்காரர் ஜானகிராமன் என்பவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று நடந்த இந்த மோதலில் பாரதியை, ஜானகிராமன் கத்தியால் குத்தியுள்ளார். இதில் முதுகில் கத்தி குத்து விழுந்த பாரதி, கடலூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு கத்திக்குத்து பட்ட இடத்தில் தையலும் போடப்பட்டது. ஆனால் வலி பொறுக்க முடியாமல் பாரதி சத்தம் போட்ட நிலையில், அவரது முதுகை மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துள்ளனர். அதில், உடைந்த கத்தி முதுகு பகுதியில் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, பாரதி உடனடியாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கத்தி முதுகில் இருந்தது கூட தெரியாமல் மருத்துவமனை ஊழியர்கள் தையல் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்