சென்னை வில்லிவாக்கத்தில் கார் ஓட்டுநர் வெட்டிக் கொலை

சென்னை வில்லிவாக்கத்தில் முன்விரோதம் காரணமாக கார் ஓட்டுநர் பாஸ்கரன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

Update: 2019-09-10 11:02 GMT
சென்னை வில்லிவாக்கத்தில் முன்விரோதம் காரணமாக கார் ஓட்டுநர் பாஸ்கரன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். விசாரணையில், ரயில்வே சங்க நிர்வாகி புதியவனின் கொலைக்கு பழி தீர்க்கும் வகையில்,இந்த சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த வில்லிவாக்கம் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து கொலையாளி சுபாஷ் என்பவரை தேடி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்