கழிவுநீர் கால்வாய் பாலம் சேதம் - வாகனஓட்டிகள், பாதசாரிகள் அவதி
தேனி மாவட்டம் தாமரைக்குளம் பகுதியில் அமைக்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் பாலம் சேதம் அடைந்துள்ளதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம் தாமரைக்குளம் பகுதியில் அமைக்பட்டுள்ள ஐந்துக்கும் மேற்பட்ட கழிவுநீர் கால்வாய் பாலம் சேதம் அடைந்துள்ளதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். கழிவுநீர் கால்வாய் பாலத்தை சீர் செய்யக்கோரி 5 ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.