முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் மீது வழக்குப்பதிவு : கொலை மிரட்டல் விடுத்ததாக அதிமுக நிர்வாகி புகார்
உட்கட்சி தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் மீது சீர்காழி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உட்கட்சி தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் மீது சீர்காழி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் மற்றும் முன்னாள் அதிமுக நகர செயலாளர் குடல் குமார் ஆகியோர் தமக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அதிமுக நிர்வாகி மதன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.