சுங்கக்கட்டணம் உயர்வு... மணல் லாரி உரிமையாளர்காள் சங்கம் கண்டனம்

தமிழகத்தில் உள்ள 44 சுங்கச்சாவடிகளில் 20க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்காள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

Update: 2019-09-01 10:57 GMT
தமிழகத்தில் உள்ள 44 சுங்கச்சாவடிகளில் 20க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்காள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. செங்கல்பட்டில் செய்தியாளர்களிடம் பேசிய மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் செய்தி தொடர்பாளர் கணேஷ், இதனால் மோட்டார் வாகன உரிமையாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மோட்டார் வாகன உரிமையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு உடனடியாக சுங்க கட்டண உயர்வை திரும்பப்பெறவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்