பயணியை தாக்க முயலும் டிக்கெட் பரிசோதகர் : முதியவர் மதுபோதையில் இருப்பதாக கூறி தாக்க முயற்சி
கோவையில் பயணியிடம் டிக்கெட் பரிசோதகர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்க முயலும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
கோவையில் பயணியிடம் டிக்கெட் பரிசோதகர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்க முயலும் காட்சிகள் வெளியாகியுள்ளது. காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்த அரசுபேருந்தில் இருந்து 3 பேர் இறங்கியுள்ளனர். அதில் முதலில் இறங்கிய முதியவரிடம் டிக்கெட்டை காண்பிக்குமாறு பரிசோதகர் கேட்டுள்ளார். பின்னால் வருபவரிடம் இருப்பதாக அவர் சொல்வதற்குள் மதுபோதையில் இருந்ததாக கூறி, டிக்கெட் பரிசோதகர் முதியவரை தாக்க முற்பட்டார். இதனையடுத்து வாக்குவாதம் ஏற்பட்டது.