நெல்லை சி.எஸ்.ஐ திருமண்டலம் மற்றும் டிடிடிஏ விவகாரம் : ஓய்வு பெற்ற நீதிபதிகள் நிர்வகிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

நெல்லை சிஎஸ்ஐ திருமண்டலம் மற்றும் டிடிடிஏ ஆகியவற்றின் கீழ் இயங்கும் நிர்வாகத்தை ஓய்வுபெற்ற நீதிபதிகள் நிர்வகிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-08-06 02:35 GMT
நெல்லை சிஎஸ்ஐ திருமண்டல நிர்வாக குழு தேர்தலை எதிர்த்தும், திருமண்டல கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளில் பணியாளர்கள் நியமனம், இடமாறுதல் தொடர்பாக உயர் நீதிமன்ற கிளையில் 31 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி மகாதேவன் நெல்லை சிஎஸ்ஐ திருமண்டலம் மற்றும்  டிடிடிஏ ஆகியவற்றை  ஜம்மு-காஷ்மீர் மாநில உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி என்.பால்வசந்தகுமார், சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.ஜோதிமணி ஆகியோர் நிர்வாகிகளாக நியமனம் செய்யப்படுகின்றனர். இவர்களிடம்  2 வாரத்தில் அனைத்து ஆவணங்களையும் நிர்வாகிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்