குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் கர்ப்பமானது தொடர்பான வழக்கு : சுகாதாரத்துறை செயலாளர் பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்ட பெண் கர்ப்பமான விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவமனை முதல்வர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-07-30 20:38 GMT
நெல்லை மாவட்டம் ஊர்க்காட்டை சேர்ந்த ஷிபா நெல்லை அரசு மருத்துவமனையில் 2014ஆம் ஆண்டு குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்து கொண்ட நிலையில், தற்போது கர்ப்பமாக உள்ளார். தனக்கு தவறான சிகிச்சை அளித்த நெல்லை அரசு மருத்துவர்கள் மீது  நடவடிக்கை எடுப்பதோடு, 20 லட்ச ரூபாய் நிவாரண தொகை வழங்கவும் உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுகுறித்து தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர், நெல்லை அரசு மருத்துவமனை முதல்வர், நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்