சுருக்குவலையை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் - விசைப்படகுகள் தீயிட்டு எரிக்கப்பட்டதால் பரபரப்பு

சுருக்குவலையை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, நடைபெற்ற போராட்டத்தின் போது விசைப்படகுகள் தீயிட்டு எரிக்கப்பட்டதால் பரங்கிப்பேட்டையில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

Update: 2019-07-29 07:08 GMT
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து  20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் சில மீனவர்கள் சுருக்கு வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்து வருவதாக கூறப்படுகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கடற்கரை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 4 படகுகளுக்கு சிலர் தீ வைத்ததால் அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது. இதனையடுத்து மீனவர்களுக்கு இடையே மோதல் ஏற்படாமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்