சேலம் கொங்கணாபுரம் அருகே 2 புதிய பாலங்கள் - முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்

சேலம் மாவட்டம் தாராமங்கலத்தில் 24 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

Update: 2019-07-21 06:55 GMT
சேலம் மாவட்டம்  தாராமங்கலத்தில் போக்கு வரத்து நெரிசலை தவிர்க்க 
 24 கோடி ரூபாய் மதிப்பில் புதிய புறவழிச்சாலையை அமைக்கப்பட்டது. இதேபோல் கொங்கணாபுரம் அருகே 5 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பில்  2 புதிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. இவற்றை மக்கள் பயன்பாட்டுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று திறந்து வைத்தார்.

"சென்னை அருகே ரூ.2 ஆயிரம் கோடியில் உணவு பூங்கா" - எடப்பாடி பழனிசாமி 

விவசாயிகள் நலனை காப்பதே தமிழக அரசின் தலையாய கடமை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் புறவழிச்சாலையை திறந்து வைத்து பேசிய அவர், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்