"வீடு கட்ட ரூ.2.10 லட்சம் மானியம்" - பேரவையில் துணை முதலமைச்சர் தகவல்

அலங்காநல்லூர், வாடிப்பட்டி குடிசை வாழ் மக்கள் 300 சதுரடி பரப்பளவில் வீடுகளை கட்டிக் கொள்ள 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-12 08:49 GMT
அலங்காநல்லூர், வாடிப்பட்டி குடிசை வாழ் மக்கள் 300 சதுரடி பரப்பளவில் வீடுகளை கட்டிக் கொள்ள 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சோழவந்தான் தொகுதி உறுப்பினர் மாணிக்கம் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், வாடிப்பட்டி, அலங்காநல்லூர் பேரூராட்சிகளில் 619 வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். 65 வீடுகள் கட்டும் பணி முழுமை பெற்ற நிலையில், மேலும், 554 வீடுகள் கட்டப்பட்டுவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்