மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலம் : இயந்திரங்களை வாங்க பணமில்லையா? மனமில்லையா? - ப. சிதம்பரம் கேள்வி
மனித கழிவுகளை அகற்றும் தொழிலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
மனித கழிவுகளை அகற்றும் தொழிலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டர் பதிவிட்டுள்ள அவர், 1993 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் மட்டும் 144 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், மனிதக் கழிவுகளை அகற்றும் இயந்திரங்களை வாங்குவதற்கு தமிழ்நாடு அரசிடம் பணமில்லையா? மனமில்லையா? என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார். உயிரிழந்த 144 பேரும் எந்தெந்த சமுதாயங்களைச் சார்ந்தவர்கள் என விசாரித்துப் பாருங்களேன் என்றும் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.