நெல்லை : காரும், பேருந்தும் மோதி விபத்து - 5 பேர் உயிரிழப்பு

நெல்லை மாவட்டம் பத்தமடை அருகே காரும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் 5 பேர் உயிரிழந்தனர்.

Update: 2019-07-08 02:37 GMT
தூத்துக்குடியில் இருந்து அம்பாசமுத்திரம் நோக்கி சென்றுகொண்டிருந்த காரும், நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் காரில் வந்த அருள்மணி, பன்னீர் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். பத்தமடை பகுதியில் உள்ள குளத்தை சுற்றியுள்ள சாலையில் எதிரில் வரும் வாகனங்கள் முறையாக தெரியாத நிலையில் இவ்விடத்தில் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்வதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்