சமயபுரம் : முடி எடுக்கும் தொழிலாளர்கள் 3 பேர் வீடு எரிந்து சாம்பல்

திருச்சி, சமயபுரத்தில் முடி எடுக்கும் தொழிலாளர்கள் 3 பேரின், குடிசை வீடுகள், தீயில் எரிந்து சாம்பலாகின.

Update: 2019-07-07 10:48 GMT
திருச்சி, சமயபுரத்தில் முடி எடுக்கும் தொழிலாளர்கள் 3 பேரின், குடிசை வீடுகள், தீயில் எரிந்து சாம்பலாகின. மாரியம்மன் கோவிலில் முடி எடுக்கும் தொழில் செய்து வரும் குமார், செல்வம், அம்மாசி ஆகியோர் வசித்து வரும் பகுதிக்கு அருகில் குவிந்துள்ள குப்பை திடீரென எரிந்து, காற்றின் வேகத்தில் குடிசைக்கு பரவியது. இதில், அவர்களது வீடுகள் மற்றும் அங்கு இருந்த ஆடை, 50 ஆயிரம், பீரோ, டிவி, மிக்சி என 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள், 2 ஆடுகள் மற்றும் ஒரு பசு ஆகியன எரிந்தன. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். குப்பையில் தீ் வைத்தது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி் வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்