நடிகர் சங்க தேர்தலை அ​மை​தியாக நடத்த வேண்டும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க அரசு ஆக்கபூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Update: 2019-06-22 20:17 GMT
நடிகர் சங்க தேர்தலை அமைதியாக, இணக்கமான முறையில்  நடத்திக் கொள்ள வேண்டும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வலியுறுத்தினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லியம்மன் கோயிலில் அதிமுக சார்பில் நடந்த வருண ஜெபத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசுகையில், தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க அரசு ஆக்கபூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறினார். தற்போது அரசின் கவனம் தண்ணீர் பிரச்சினையின் மீது இருப்பதால் நடிகர் சங்க தேர்தல் அவர்கள் இணக்கமான முறையில் நடத்திக் கொள்ள வேண்டும் என்றார். 
Tags:    

மேலும் செய்திகள்