மதுரையில் தமிழன்னை சிலையை அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்
மதுரையில் தமிழன்னை சிலையை அமைக்கக் கோரி நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
மதுரையில் தமிழன்னை சிலையை அமைக்கக் கோரி நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். அப்போது வாகனங்கள் செல்வதற்கு வழி இல்லாத நிலையில் அதை சரிசெய்யும் பணியில் உதவி ஆய்வாளர் பூமிநாதன் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.