பசுமையாக காட்சியளிக்கும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் தொடர்மழை பெய்ததால், வனப்பகுதி பச்சைப்பசேலென காட்சியளிக்கிறது.

Update: 2019-06-09 05:27 GMT
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் தொடர்மழை பெய்ததால், வனப்பகுதி பச்சைப்பசேலென காட்சியளிக்கிறது. தமிழகத்தில் உள்ள 4 புலிகள் காப்பகங்களில் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி அதிக பரப்பளவு கொண்ட அடர்ந்த வனப்பகுதியாகும். கடந்த 4 மாதமாக மழை பெய்யாததால் வனப்பகுதியில் கடுமையான வறட்சி ஏற்பட்டு மரங்கள், செடிகொடிகள் காய்ந்து கிடந்தன. இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால், காய்ந்து கிடந்த மரங்கள் துளிர்விட்டு பசுமை நிறைந்து காணப்படுகிறது. இதனால் வனப்பகுதியை ஒட்டிய சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், வனத்தின் அழகை ரசித்தப்படியே செல்கின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்