அனுமதியின்றி பேரணி : கே.எஸ். அழகிரி உள்ளிட்ட 500 பேர் மீது வழக்குப்பதிவு

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, புதிய எம்.பிக்கள் திருநாவுக்கரசு, வசந்தகுமார் உட்பட 500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-05-30 08:36 GMT
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, புதிய எம்.பிக்கள் திருநாவுக்கரசு, வசந்தகுமார் உட்பட 500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலக கூடாது என்பதை வலியுறுத்தி, தமிழக காங்கிரஸ் கட்சியினர், சென்னையில் பேரணியாக சென்றனர். அனுமதியின்றி இந்த பேரணி நடத்தப்பட்டதாக கூறி, கே.எஸ். அழகிரி, திருநாவுக்கரசு ,வசந்தகுமார் உட்பட சுமார் 500 பேர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய இரண்டு பிரிவின் கீழ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்