காவல் ஆய்வாளருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் - வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் அதிரடி

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

Update: 2019-05-27 13:19 GMT
நெல்லை மாவட்டம் பணகுடி காவல் நிலையத்தில் கடந்த 2017ம் ஆண்டு ஆய்வாளராக ஸ்டீபன் ஜோஸ் என்பவர் பணியாற்றி வந்தார். அப்போது வழக்கறிஞர்களை அவமதித்து விட்டதாக காவல் ஆய்வாளர் ஸ்டீபன் மீது வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது விசாரணைக்கு மூன்று முறை ஆஜராகததால் காவல் ஆய்வாளர் ஸ்டீபனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி காமராஜ் உத்தரவிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்