எம்.எல்.ஏ. பதவியை 14 நாட்களுக்குள் ராஜினாமா செய்வேன் - வசந்தகுமார் தகவல்

கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், 14 நாட்களுக்குள் சட்ட ரீதியாக தனது நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறியுள்ளார்.

Update: 2019-05-25 03:10 GMT
கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், 14 நாட்களுக்குள் சட்ட ரீதியாக தனது நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறியுள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ண‌னை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வசந்தகுமார், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி,  14 நாட்களுக்குள்  சட்டரீதியாக நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன் என தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்