பெண் கொல்லப்பட்ட வழக்கில் அவரின் கள்ளக்காதலன் கைது..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பெண் கொல்லப்பட்ட வழக்கில் அவரின் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார். தகாத உறவை கைவிட்டதால் இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.

Update: 2019-05-21 07:42 GMT
சத்தியமங்கலம் அருகே சிக்கரசம்பாளையத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ரங்கன். இவரின் மனைவி லட்சுமி கடந்த 17ஆம் தேதி இரவு  சிக்கரசம்பாளையம் பிரிவில் பேருந்தில் இருந்து இறங்கி நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த நபர் லட்சுமியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பினார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது லட்சுமியை கொன்றவர் சத்தியமங்கலம் வடக்கு பேட்டை  பகுதியைச் சேர்ந்த கட்டட தொழிலாளி தாமோதரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். கட்டடத் தொழிலாளியான தாமோதரனுக்கும் லட்சுமிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் தகாத உறவை தொடர்ந்த நிலையில் அது லட்சுமியின் கணவர் ரங்கனுக்கு  தெரியவந்துள்ளது. தனது மனைவி லட்சுமியை ரங்கன் கண்டித்ததுடன் தாமோதரனுடனான உறவை துண்டிக்குமாறு வலியுறுத்தியிருக்கிறார். இதையடுத்து லட்சுமி  தாமோதரனுடன் பேசாமல் இருந்துள்ளார். தன்னுடன் மீண்டும் பேசுமாறு பலமுறை வற்புறுத்தியும் லட்சுமி பேச மறுத்துவிட்டதால் அந்த ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்ததாக தாமோதரன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். கடந்த 17ஆம் தேதி வெளியே சென்றிருந்த லட்சுமி பேருந்தில் இறங்கி நடந்து சென்றபோது வழிமறித்த தாமோதரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த தாமோதரன் லட்சுமியை கொலை செய்துவிட்டு தப்பியுள்ளார். போலீசாரின்ன் விசாரணைக்கு பின் தாமோதரன் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்காதலை தொடர மறுத்ததாலும் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. செய்த தவறை மாற்றி திருந்தி வாழ நினைத்த பெண் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்