கோயில் திருவிழாவை முன்னிட்டு பாய்மர படகுப் போட்டி...
திருவாடானை பகுதியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு பாய்மர படகுப் போட்டி நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு பாய்மர படகுப் போட்டி நடைபெற்றது. பாலசுப்பிரமணியர் கோயிலில் வைகாசி பெருவிழா கடந்த மே 9ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இந்நிலையில் திருவிழாவை முன்னிட்டு மீனவர்கள் இடையே பாய்மர படகு போட்டி தொண்டி கடலில் நடைபெற்றது. இந்த போட்டியில் தொண்டி, நம்புதாளை, தேவிப்பட்டிணம் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட பாய்மர படகுகள் கலந்து கொண்டனர். இந்த படகுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.